ஸ்ரீ போஜனம்
Sunday, November 23, 2014
Saturday, November 22, 2014
ஆலூ மட்டர்
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு (சிறியது) அரை கிலோ
பச்சை பட்டாணி - 2 கப்
வெங்காயம் பெரியது 1;பொடிப் பொடியாக நறுக்கவும்.
பூண்டு 4 பல் (பொடியாக நறுக்கப்பட்டது)
நன்கு பழுத்த புளிப்பான தக்காளி (பெரியது) 2
இஞ்சி ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் 4 (அவரவர் சுவைக்கேற்ப கூடவோ குறைத்தோ எடுத்துக் கொள்ளவும்)
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
சாம்பார் பொடி அரை ஸ்பூன்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
சீரகம்
சோம்பு
செய்முறை:
1. முதலில் உருளை கிழங்கை குக்கரில் வேக வைத்து தோலை நீக்கவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும்.
3. பிறகு அதில் நறுக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, இஞ்சியை சேர்த்து அத்துடன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் அதில் மஞ்சள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
4. தக்காளி & பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்தக் கலவையை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5. கலவை நன்கு கொதித்த உடன் வேக வைத்த உருளை கிழங்கையும் அத்துடன் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.உருளை கிழங்கு உடைந்துவிடாமல் அவ்வப்போது லேசாகக் கிளறிவிடவும்.
6. கடைசியில் சிறிதளவு பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை நன்கு பொடி செய்து மிகச் சிறிதளவு தூவி கலக்கவும்.
7. பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
உருளை கிழங்கு (சிறியது) அரை கிலோ
பச்சை பட்டாணி - 2 கப்
வெங்காயம் பெரியது 1;பொடிப் பொடியாக நறுக்கவும்.
பூண்டு 4 பல் (பொடியாக நறுக்கப்பட்டது)
நன்கு பழுத்த புளிப்பான தக்காளி (பெரியது) 2
இஞ்சி ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் 4 (அவரவர் சுவைக்கேற்ப கூடவோ குறைத்தோ எடுத்துக் கொள்ளவும்)
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
சாம்பார் பொடி அரை ஸ்பூன்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
சீரகம்
சோம்பு
செய்முறை:
1. முதலில் உருளை கிழங்கை குக்கரில் வேக வைத்து தோலை நீக்கவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும்.
3. பிறகு அதில் நறுக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, இஞ்சியை சேர்த்து அத்துடன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் அதில் மஞ்சள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
4. தக்காளி & பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்தக் கலவையை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5. கலவை நன்கு கொதித்த உடன் வேக வைத்த உருளை கிழங்கையும் அத்துடன் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.உருளை கிழங்கு உடைந்துவிடாமல் அவ்வப்போது லேசாகக் கிளறிவிடவும்.
6. கடைசியில் சிறிதளவு பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை நன்கு பொடி செய்து மிகச் சிறிதளவு தூவி கலக்கவும்.
7. பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Thursday, November 6, 2014
ரசப்பொடி
தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு : 1/2 கிலோ
மிளகு : 250 கிராம்
மிளகு : 250 கிராம்
சீரகம் : 200 கிராம்
பெருங்காயம் : 100 கிராம்
மிளகாய் வத்தல் : 300 கிராம்
தனியா : 3/4 கிலோ
மஞ்சள் பொடி : 50 கிராம்
கறிவேப்பிலை : 1 கைப்பிடி
செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மிளகை லேசாக வறுக்கவும். பின்னர் துவரம் பருப்பு. அது லேசாக வறுபட்டதும் மிளகாய் வத்தலை கிள்ளிப் போட்டு விடுங்கள். தனியாவை சேருங்கள் . அதன் பின் கறிவேப்பிலை. பிறகு கடைசியாக சீரகம் போட்டு வறுத்து விடுங்கள். பெருங்காயத்தை பொடித்து எடுத்து வைத்திருந்து (சூடான வெறும் வாணலியில் கெட்டி பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு பொறித்து எடுத்துக்கொண்டு) இந்த கலவையில் போட வேண்டும். இதை மிக்ஸ்சியில் சின்ன ரவை பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொண்டு பிறகு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து விடுங்கள். 4 டம்ளர் தக்காளி அல்லது பருப்பு ரசத்துக்கு இந்த ரசப்பொடி 1-1/2 ஸ்பூன் போட வேண்டும்.
மஞ்சள் பொடி : 50 கிராம்
செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மிளகை லேசாக வறுக்கவும். பின்னர் துவரம் பருப்பு. அது லேசாக வறுபட்டதும் மிளகாய் வத்தலை கிள்ளிப் போட்டு விடுங்கள். தனியாவை சேருங்கள் . அதன் பின் கறிவேப்பிலை. பிறகு கடைசியாக சீரகம் போட்டு வறுத்து விடுங்கள். பெருங்காயத்தை பொடித்து எடுத்து வைத்திருந்து (சூடான வெறும் வாணலியில் கெட்டி பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு பொறித்து எடுத்துக்கொண்டு) இந்த கலவையில் போட வேண்டும். இதை மிக்ஸ்சியில் சின்ன ரவை பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொண்டு பிறகு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து விடுங்கள். 4 டம்ளர் தக்காளி அல்லது பருப்பு ரசத்துக்கு இந்த ரசப்பொடி 1-1/2 ஸ்பூன் போட வேண்டும்.
Friday, March 22, 2013
மைக்ரோவேவ் பால்கோவா
தேவையான பொருட்கள்
கன்டென்ஸ்ட் மில்க் ஒரு டின்
பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 80 கிராம் அல்லது நெய்
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் பால் டின்னை திறந்து மைக்ரோவேவ் கண்ணாடி
பாத்திரத்தில் ஊற்றவும்
பிறகு வெண்ணெயை மைக்ரோ அவனில் லேசாக உருக்கி பாலில்
சேர்க்கவும்,
பின்பு தயிர், பால் பவுடரை சிறிது சிறிதாக அதில் விட்டு ஒரு கரண்டியால்
கட்டி இல்லாமல் கிளறவும்.
பின்பு மைக்ரோ அவனில்5 நிமிடங்கள் வைக்கவும்., பிறகு 3
நிமிடங்களில் வெளியே எடுத்து நன்றாக கிளறவும்,
இப்படியே 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும். .
இப்பொழுது லேசாகசிவந்து கடை பால்கோவா நிறத்துடன் காணப்படும்.
இப்பொழுது சுவையான பால் கோவா தயார்.
செய்முறை
கட்டி இல்லாமல் கிளறவும்.
இப்படியே 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும். .
பாலக் பனீர்
தேவையான பொருட்கள்
பசலைக் கீரை - ஒரு கட்டு
பனீர் - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.
பசலைக் கீரையை வதக்கிக் கொள்ளவும் . ஒரு வாணலியில் எண்ணெய்
விட்டு காய்ந்ததும் மிளகாயைத் தாளித்துக் கொள்ளவும் . இதில் அரைத்த
பசலைக் கீரையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது,
உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க விடவும். பாலக் கிரேவி நன்றாகக்
கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு பரிமாறவும்..
பசலைக் கீரை - ஒரு கட்டு
பனீர் - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.
பசலைக் கீரையை வதக்கிக் கொள்ளவும் . ஒரு வாணலியில் எண்ணெய்
விட்டு காய்ந்ததும் மிளகாயைத் தாளித்துக் கொள்ளவும் . இதில் அரைத்த
பசலைக் கீரையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது,
உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க விடவும். பாலக் கிரேவி நன்றாகக்
கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு பரிமாறவும்..
மேத்தி புலாவ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப்
நறுக்கிய தக்காளி - 2 கப்
நறுக்கிய வெந்தயக் கீரை - 1 கப்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
புதினா - 1 கப்
வெங்காயம் - 1 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய், பட்டை - சிறிதளவு
கிராம்பு சிறிதளவு
எண்ணெய் (அ) வெண்ணெய்
உப்பு தேவையான அளவு.
செய்முறை
வாணலியில் அல்லது குக்கரில் வெண்ணெய் உருகியதும், ஏலக்காய், பட்டை,
கிராம்பு தாளிக்கவும். இதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,
கீரைகள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு
வதக்கவும். வதங்கியதும் பாசுமதி அரிசியையும் போட்டு வதக்கி 4 கப்
தண்ணீர், தேங்காய்பால், உப்பு போட்டு நன்கு கிளறி வேக விடவும். குக்கரில் 2
விசில் வந்ததும் மேதி புலாவ் பரிமாற ரெடி!
பாசுமதி அரிசி - 2 கப்
நறுக்கிய தக்காளி - 2 கப்
நறுக்கிய வெந்தயக் கீரை - 1 கப்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
புதினா - 1 கப்
வெங்காயம் - 1 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய், பட்டை - சிறிதளவு
கிராம்பு சிறிதளவு
எண்ணெய் (அ) வெண்ணெய்
உப்பு தேவையான அளவு.
செய்முறை
வாணலியில் அல்லது குக்கரில் வெண்ணெய் உருகியதும், ஏலக்காய், பட்டை,
கிராம்பு தாளிக்கவும். இதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,
கீரைகள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு
வதக்கவும். வதங்கியதும் பாசுமதி அரிசியையும் போட்டு வதக்கி 4 கப்
தண்ணீர், தேங்காய்பால், உப்பு போட்டு நன்கு கிளறி வேக விடவும். குக்கரில் 2
விசில் வந்ததும் மேதி புலாவ் பரிமாற ரெடி!
கோதுமை ரவை கேசரி
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை ஒரு கப்
கண்டன்ஸ்ட் மில்க் ஒரு டின்
நெய் அரை கப்
ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் பருப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கோதுமை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துத்
தனியே வைத்துக் கொள்ளவும்.
பிறகு 2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் இந்த ரவையைப் போட்டு
சுருண்டு வரும் வரை நன்கு கிளறவும்.
பிறகு நெய் மற்றும் கன்டன்ஸ்ட் மில்க்கையும் சேர்த்து
நெய் பிரிந்து வரும் வரையில் கிளறவும்.
பிறகு ஏலம் முந்திரி பாதாம் எல்லாம் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி
ஆறியவுடன் வில்லை போடவும்.
கோதுமை ரவை ஒரு கப்
கண்டன்ஸ்ட் மில்க் ஒரு டின்
நெய் அரை கப்
ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் பருப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கோதுமை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துத்
தனியே வைத்துக் கொள்ளவும்.
பிறகு 2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் இந்த ரவையைப் போட்டு
சுருண்டு வரும் வரை நன்கு கிளறவும்.
பிறகு நெய் மற்றும் கன்டன்ஸ்ட் மில்க்கையும் சேர்த்து
நெய் பிரிந்து வரும் வரையில் கிளறவும்.
பிறகு ஏலம் முந்திரி பாதாம் எல்லாம் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி
ஆறியவுடன் வில்லை போடவும்.
Subscribe to:
Comments (Atom)