Friday, March 22, 2013

பாலக் பனீர்

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை - ஒரு கட்டு

பனீர் - ஒரு கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.

பசலைக் கீரையை வதக்கிக் கொள்ளவும் . ஒரு வாணலியில் எண்ணெய்

விட்டு காய்ந்ததும் மிளகாயைத் தாளித்துக் கொள்ளவும் . இதில் அரைத்த

பசலைக் கீரையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது,

உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க விடவும். பாலக் கிரேவி நன்றாகக்

 கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு பரிமாறவும்..

No comments:

Post a Comment