Thursday, March 21, 2013

கல்யாண சாம்பார்


  தேவையான பொருட்கள் 
  • புளி ஒரு எலுமிச்சம் பழ அளவு
  • உப்பு தேவையான அளவு
  • சாம்பார் பொடி அரை ஸ்பூன்
  • துவரம் பருப்பு அரை கப்
  • கத்தரிக்காய் 1
  • காரட் 1
  • குடை மிளகாய் 1
  • உருளை கிழங்கு 1
  • வறுத்து அரைக்க
  • தனியா 3 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
  • சீரகம் ஒரு டீ ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 4
  • பெருங்காயம் சிறிதளவு
  • தாளிக்க
  • கடுகு
  • காய்ந்த மிளகாய்
  • கறி வேப்பிலை
  • எண்ணெய் 3 டீ ஸ்பூன்
  • செய்முறை
  • முதலில் துவரம் பருப்பை குக்கரில் நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து வருக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் (எண்ணெய் சேர்த்தோ சேர்க்காமலோ) அல்லது தனித் தனியே வறுத்து கரகரப்பாக மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு காய்கறிகளை எல்லாம் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • காய் வதங்கிய பிறகு புளி கரைசல், உப்பு மற்றும் சாம்பார் பொடியை அத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • சாம்பார் நன்கு கொதித்த உடன் வெந்த பருப்பை அதில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பிறகு மேற்படி பொடியில் ஒரு ஸ்பூன் தூவவும். . சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால் consistancy க்கு சிறிதளவு அரிசி மாவை நீரில் கரைத்து அத்துடன் கலந்து 2  கொதிக்க விடவும். பிறகு தாளித்து சூடாக பரிமாறவும்.

Note:

(பொதுவாக பிராமணர்கள் வீட்டுத் திருமணங்களில் வெங்காயம் சேர்ப்பதில்லை. எனவே மேற்படி சாம்பாரில் நான் சேர்க்கவில்லை. மற்றபடி அவரவர் விருப்பப் படி எந்த காய்கறி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொண்டு இதே முறையில் செய்யலாம்

No comments:

Post a Comment