Thursday, March 21, 2013

சுரைக்காய் பத்திய கூட்டு

தேவையான பொருட்கள் 

  • சிறிது சிறிதாக நறுக்கிய சுரைக்காய் இரண்டு கப்
  • பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) --- அரை கப்
  • தக்காளி ஒன்று
  • மஞ்சள் பொடி கால் டீ ஸ்பூன்
  • கடுகு அரை டீ ஸ்பூன்
  • சீரகம் அரை டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு அரை டீ ஸ்பூன்
  • பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீ ஸ்பூன்
  • பச்சை மிளகாய் 2
  • கறி வேப்பிலை ஒரு கொத்து
  • பெருங்காயம் கால் டீ ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் ஒரு டீ ஸ்பூன்
  • அரை ஸ்பூன் அரிசி மாவு

  • செய்முறை
  • வாணலியில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும். பிறகு சுரைக்காய் & பொடியாக நறுக்கிய தக்காளியை உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும். பிறகு நன்கு குழைய வேக வைத்த பயத்தம் பருப்பை அத்துடன் சேர்க்கவும். அனைத்தும் நன்கு வெந்த உடன், அரிசி மாவை 4 தண்ணீரில் கலந்து அதில் கலந்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • (மாவு கரைத்து விடுவதால் கூட்டு அதன் சரியான பதத்தில் அமையும்)




No comments:

Post a Comment