தேவையான பொருட்கள்
- சிறிது சிறிதாக நறுக்கிய சுரைக்காய் இரண்டு கப்
- பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) --- அரை கப்
- தக்காளி ஒன்று
- மஞ்சள் பொடி கால் டீ ஸ்பூன்
- கடுகு அரை டீ ஸ்பூன்
- சீரகம் அரை டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு அரை டீ ஸ்பூன்
- பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் 2
- கறி வேப்பிலை ஒரு கொத்து
- பெருங்காயம் கால் டீ ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் ஒரு டீ ஸ்பூன்
- அரை ஸ்பூன் அரிசி மாவு
- செய்முறை
- வாணலியில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும். பிறகு சுரைக்காய் & பொடியாக நறுக்கிய தக்காளியை உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும். பிறகு நன்கு குழைய வேக வைத்த பயத்தம் பருப்பை அத்துடன் சேர்க்கவும். அனைத்தும் நன்கு வெந்த உடன், அரிசி மாவை 4 தண்ணீரில் கலந்து அதில் கலந்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- (மாவு கரைத்து விடுவதால் கூட்டு அதன் சரியான பதத்தில் அமையும்)
No comments:
Post a Comment