Thursday, March 21, 2013

பிஸி பேளா பாத்

தேவையான பொருட்கள்

  • வறுத்து அரைக்க:

  • தனியா 3 டீ ஸ்பூன்

  • கடலை பருப்பு ஒரு டீ ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் 4

  • எண்ணெய் ஒரு டீ ஸ்பூன்

  • அரிசி ஒரு கப்

  • துவரம் பருப்பு அரை கப்

  • சின்ன வெங்காயம் 10

  •      பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப்

  • குடை மிளகாய் 1

  • பீன்ஸ் 1 ௦

  • காரட் 1

  • தக்காளி 2

  • அவரவர்களுக்கு விருப்பமாக காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம்.

  • துருவிய தேங்காய் 4 ஸ்பூன்

  • புளி ஒரு நெல்லிக்காய் அளவு

  • சாம்பார் பொடி அரை ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு

  • தாளிக்க

  • கடுகு

  • முந்திரி 10

  • கறிவேப்பிலை ஒரு கொத்து

  • பெருங்காயம் சிறிதளவு

  • செய்முறை:

  • வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள சாமான்களில் தனியா & காய்ந்த மிளகாய் தவிர மற்ற பொருட்களை எல்லாம் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு தனியாவை வறுக்கவும்.

  • கடைசியாக வாணலியின் சூட்டிலேயே மிளகாயை வறுத்து அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

  • அரிசியையும் பருப்பையும் களைந்து குக்கரில் நன்கு குழைய  வேக வைக்கவும்.

  • கொடுக்கப் பட்டுள்ள காய்கறிகளை சன்னமாக நறுக்கி, வாயன்ற ஒரு பாத்திரத்தில் தக்காளி நீங்கலாக மற்றவற்றைப் போட்டு தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  •  காய்கள் வாங்கியதும் புளி கரைசலை அதில் சேர்த்து உப்பு மற்றும் சாம்பார் பொடி,தக்காளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  •  பிறகு குக்கரில் உள்ள பருப்பு சாதத்தை இத்துடன் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொடியையும் மேலே தூவி, நன்கு கிளறவும்.

  • பிறகு கடுகு, முந்திரி, பெருங்காயம், கறிவேப்பிலை  எல்லாம் தாளிக்கவும்.

  • பரிமாறும் பொது சிறிது நெய் கலந்து கிளறி பரிமாறவும்.
  • Note:

    வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் மொத்தமாக (எண்ணெய் சேர்க்காமல்) அரைத்து பத்திர படுத்தி வைத்துக் கொண்டுவிட்டால், சுவையான சாம்பார் சாதம் மிக எளிதாக செய்துவிடலாம்.
     

    No comments:

    Post a Comment